ராஜாஜி இந்திய துனைகண்டத்தில் அனுபவிக்காத பதவிகள் கிடையாது . அவர் மஹாத்மாவின் சம்பந்தி . இந்தியாவின் முதல் பாரத ரத்னா .
இவ்வளவிற்கும் காரணம் என்ன தெரியுமா ?
இருபது வருடத்திற்கு முன் எண்பது வயது முதியவர் ஒருவர் என்னிடம் கேட்டார்.
நல்ல ஆங்கில புலமை !தன்னை தண்டபாணி தேசிகரின் ஒன்று விட்ட தம்பி என அறிமுகம் செய்து கொண்டார் .
அப்போதெல்லாம் தண்டபாணி தேசிகரின் " தாமரை பூத்த தடாகமடி !" பாடல் கேட்காமல் நான் தூங்கியதே இல்லை .
தண்டபாணி தேசிகரின் ஒன்று விட்ட சகோதரர் சுப்ரமணிய தேசிகர் அந்த வயதில் நான்காவது திருமணம் செய்திருந்தார் . அந்த நான்காவது மனைவி ஒரு வேலைக்கார பெண் . அந்த பெண் தன் நான்காவது மனைவி என்ற தேசிகர் தன் முந்தைய மூன்று திருமணம் குறித்தும் என்னிடம் சொன்னார் .
ராஜாஜி எட்டு கண்ணும் விட்டெரிய வாழ்ந்ததற்கு காரணம் 'ஸ்வர்ண ஆகர்ஷன மந்திரம்' தானாம் . எந்நேரமும் இதை மனதிற்குள் பாராயணம் செய்துகொண்டு தான் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் ஆயுள் முழுக்க இருந்தார் ,தேசிகர் உறுதியாக சொன்னார் .
வைஷ்ணவர் பாராயாணம் செய்த சைவ மந்திரம்??!!
"ஓம் ஸ்ரீம் ஐம் க்லாம் க்லீம் ஹ்ரூம் சகவம்
ஆபத்துத்தரானாய அஜோமலபத்தாய
மமதாரிதிரிய விஷ்வேஷ்வராய ஒம் மகா பைரவாய நமஹா
ஓம் ஹ்ரீம் ஐம் க்கலாம் ஹ்ரீம் "
இது பைரவ மந்திரம் !
ஆண்டு அனுபவித்து அந்திம காலத்தில் ராஜாஜி இந்த மந்திரத்தை யாருக்கேனும் உபதேசிக்க வேண்டிய தன் கடமையை எண்ணியிருக்கிறார் .ஆனால் அவருக்கு உபதேசிக்க தகுதியாக யாருமே தென்படவில்லையாம் . மகனுக்கு யோக்யதை இல்லை என முடிவாக நம்பியிருக்கிறார் . அரசியலில் கூட தன் சீடன் என்று தகுதியுள்ள யாரும் இல்லை என வெதும்பி வேதனையுடன் யோசித்தாராம் . சரி . இலக்கிய உலகில் ..ம்ஹூம் ... வேறு துறைகளில் இதை யாருக்காவது உபதேசிக்கலாமா .அப்படி யாருமே ராஜாஜிக்கு நம்பகமாக தோன்றவில்லையாம் .
ஆனால் சாஸ்த்திர படி ஸ்வர்ண ஆகர்ஷன மந்திரத்தை அந்திம காலத்தில் கட்டாயம் யார் காதிலாவது உபதேசிக்க வேண்டியது வேத கடமை . என்ன செய்ய . தன்னுடைய தொண்ணூறு வயதில் இது அவருக்கு பிரதான மன அவசமாய் இருந்திருக்கிறது .
கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தாராம் . மனிதர் யாருக்கும் தன்னிடம் உபதேசம் பெற யோக்யதை இல்லை .
வீட்டு கொல்லைபுறம் மாட்டு தொழுவத்திற்கு போனாராம் . பசு மாடு கன்றை தன் நாக்கால் தடவிகொடுத்து கொண்டு நின்றிருக்கிறது . பசுமாட்டின் காதில் மந்திரத்தை ரகசியமாக சொல்லிவிட்டார் !
விச்ராந்தியாய் ஆச்சாரியார் பெருமூச்சு விட்டாராம் !!
இவ்வளவிற்கும் காரணம் என்ன தெரியுமா ?
இருபது வருடத்திற்கு முன் எண்பது வயது முதியவர் ஒருவர் என்னிடம் கேட்டார்.
நல்ல ஆங்கில புலமை !தன்னை தண்டபாணி தேசிகரின் ஒன்று விட்ட தம்பி என அறிமுகம் செய்து கொண்டார் .
அப்போதெல்லாம் தண்டபாணி தேசிகரின் " தாமரை பூத்த தடாகமடி !" பாடல் கேட்காமல் நான் தூங்கியதே இல்லை .
தண்டபாணி தேசிகரின் ஒன்று விட்ட சகோதரர் சுப்ரமணிய தேசிகர் அந்த வயதில் நான்காவது திருமணம் செய்திருந்தார் . அந்த நான்காவது மனைவி ஒரு வேலைக்கார பெண் . அந்த பெண் தன் நான்காவது மனைவி என்ற தேசிகர் தன் முந்தைய மூன்று திருமணம் குறித்தும் என்னிடம் சொன்னார் .
ராஜாஜி எட்டு கண்ணும் விட்டெரிய வாழ்ந்ததற்கு காரணம் 'ஸ்வர்ண ஆகர்ஷன மந்திரம்' தானாம் . எந்நேரமும் இதை மனதிற்குள் பாராயணம் செய்துகொண்டு தான் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் ஆயுள் முழுக்க இருந்தார் ,தேசிகர் உறுதியாக சொன்னார் .
வைஷ்ணவர் பாராயாணம் செய்த சைவ மந்திரம்??!!
"ஓம் ஸ்ரீம் ஐம் க்லாம் க்லீம் ஹ்ரூம் சகவம்
ஆபத்துத்தரானாய அஜோமலபத்தாய
மமதாரிதிரிய விஷ்வேஷ்வராய ஒம் மகா பைரவாய நமஹா
ஓம் ஹ்ரீம் ஐம் க்கலாம் ஹ்ரீம் "
இது பைரவ மந்திரம் !
ஆண்டு அனுபவித்து அந்திம காலத்தில் ராஜாஜி இந்த மந்திரத்தை யாருக்கேனும் உபதேசிக்க வேண்டிய தன் கடமையை எண்ணியிருக்கிறார் .ஆனால் அவருக்கு உபதேசிக்க தகுதியாக யாருமே தென்படவில்லையாம் . மகனுக்கு யோக்யதை இல்லை என முடிவாக நம்பியிருக்கிறார் . அரசியலில் கூட தன் சீடன் என்று தகுதியுள்ள யாரும் இல்லை என வெதும்பி வேதனையுடன் யோசித்தாராம் . சரி . இலக்கிய உலகில் ..ம்ஹூம் ... வேறு துறைகளில் இதை யாருக்காவது உபதேசிக்கலாமா .அப்படி யாருமே ராஜாஜிக்கு நம்பகமாக தோன்றவில்லையாம் .
ஆனால் சாஸ்த்திர படி ஸ்வர்ண ஆகர்ஷன மந்திரத்தை அந்திம காலத்தில் கட்டாயம் யார் காதிலாவது உபதேசிக்க வேண்டியது வேத கடமை . என்ன செய்ய . தன்னுடைய தொண்ணூறு வயதில் இது அவருக்கு பிரதான மன அவசமாய் இருந்திருக்கிறது .
கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தாராம் . மனிதர் யாருக்கும் தன்னிடம் உபதேசம் பெற யோக்யதை இல்லை .
வீட்டு கொல்லைபுறம் மாட்டு தொழுவத்திற்கு போனாராம் . பசு மாடு கன்றை தன் நாக்கால் தடவிகொடுத்து கொண்டு நின்றிருக்கிறது . பசுமாட்டின் காதில் மந்திரத்தை ரகசியமாக சொல்லிவிட்டார் !
விச்ராந்தியாய் ஆச்சாரியார் பெருமூச்சு விட்டாராம் !!


Wow this one is out of the world, never come across this info. Rajaji was a statesman nonpareil though I am sure if this mantra contributed anything to his blazing intelligence.