Share

Dec 13, 2008

ஏகாதசி தோசையும் இளைய குடியா மாகையும்

பழைய பழமொழிகளை கேட்கும்போது சில பழமொழிகள் புரியாது . இந்த பழமொழியை பாருங்கள் .
"ஏகாதசி தோசையும் இளையகுடியா மாகையும்"
கி ரா என்னிடம் சொன்னார் ! அவரே விளக்கம் சொன்னார் .
ருசி சம்பந்தப்பட்டது . முக்கியத்துவம் குறித்தது .
ஏகாதசி விரதம் இருப்பவர்கள் முடியும்போது அந்த காலத்தில் தோசை சாப்பிடுவார்கள் . நல்ல பசியில் இருக்கும்போது சாப்பிடும் தோசை ருசி எப்படி இருக்கும் !!
இளைய குடியா - இரண்டாவது மனைவி , அபிமான தாரம் .
மாகை - மாய்கை
அபிமான தாரம் போடும் தலையணை மந்திரம் ,சொக்குபொடி - இதன் சக்தி ,சுவை , முக்கியத்துவம் ..
'என்ன மாயம் போட்டா .. இவன் ஆளே மாறிட்டானே '- கிழவிகள் முனுமுனுப்பு !
...
The other woman is always powerful!
..
ராதாகிருஷ்ணன் ன்னு தானே பெயர் வச்சுகிறான் . எவனாவது ருக்மிணி கிருஷ்ணன் நு பேர் வச்சிக்கிரானா ?
இந்திரா பார்த்தசாரதி என்னிடம் ஒரு முறை இப்படி கேட்டார் !
...........
ரெண்டாவது பொண்டாட்டி பேரை தான் முதல்ல சொல்ற வழக்கம் இங்கே .
முருகனோட ரெண்டு பொண்டாட்டிங்க " வள்ளி -தெய்வானை !"

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.