Share

Feb 9, 2009

Over Action

ஜெமினி கணேஷ் இறந்தபோது காலச்சுவடில் நான் எழுதிய இரங்கலில் குறிப்பிட்டேன் : " தமிழ் திரையின் உக்கிரமான ஆகிருதிகள் எம் ஆர் ராதா , சிவாஜி கணேசன் , நாகேஷ் ஆகியோர் . நேர் எதிர் திசையில் மென்மையாக சாதித்தவர்கள் : ஜெமினி கணேஷ் , எஸ் வி ரங்காராவ் , டி .எஸ் . பாலையா மூவரும் "

( நாகேஷ் இறப்பதற்கு ஐந்து தினம் முன் 'மத்திய அரசின் பத்ம விருதுகள்' என்ற பதிவில்
"தமிழ் திரை கண்ட நகைச்சுவை நடிகர்களில் சத்தியமாக முதன்மையானவர் நாகேஷ் தான் . " என நான் குறிப்பிட்டிருந்தேன் .)
உக்கிரமான ஆகிருதிகள் மூவரிடமும் ஓவர் ஆக்சன் இருந்தது .
இவர்களில் சிவாஜியின் ஓவர் ஆக்சன் மக்களால் ரசிக்கப்படவில்லை . சிவாஜியின் நடிப்பில் மிகை யை ஒரு குறையாக த்தான் திரை ரசிகர்கள் எழுபதுகளில் அதிகம் கண்டு எரிச்சலுற்றார்கள் என்பது தான் உண்மை .
நாகேஷும் அப்படித்தான் . ஓவர் ஆக்சன் அவர் தத்துவவாதியாக மாறி ' தத்துவத்துக்கு அம்மா 'கற்பனை 'அப்பா கவலை ' என்று சாதாரணமாக சினிமாவுக்கு வெளியே கூட தத்துவம் பேச ஆரம்பித்தவர் நாகேஷ் . திரையில் நாகேஷ் ஓவர் ஆக்சன் சொல்லி முடியாது .
'கடல் மீன்கள் ' படத்தின் எடிட்டிங் போது கமல் ஹாசன் வந்திருந்து அவருடன் நாகேஷ் கடல் போட் சீனில் செய்திருந்த சகிக்க முடியாத ஓவர் ஆக்சன் பகுதிகளை எடுத்து விட சொன்ன போது நான் அங்கிருந்தேன் . கமல் ஜி என் ரங்கராஜனிடம் சொன்னார் : நாகேஷ் ஷாட்ஸ் நிறைய நீக்கிடனும் . ஓவர் ஆக்சன் ரொம்ப . நாகேஷை எல்லாம் எங்க வாத்தியார் ( பாலச்சந்தர் ) தான் சரியா வேலை வாங்க முடியும் . மத்தவங்க அவர லூசா விட்டா ரொம்ப சொதப்பிடுவார் .மத்தவங்களுக்கு நாகேஷை வேலை வாங்கறது சிரமம் "
அன்று கடல் மீன்கள் படத்தில் தங்கவேலு நடிப்பை பிரமாதமா கமல் புகழ்ந்தார் .

பின்னால் கமல் படங்களில் நாகேஷ் நடிப்பை நன்கு கவனமாக பதிந்ததில் கமலின் இந்த எச்சரிக்கை உணர்வு தான் காரணம் .

எம் ஆர் ராதாவின் நடிப்பில் அவர் எவ்வளவு தான் ஓவர் ஆக்சன் செய்தாலும் தமிழ் மக்கள் அதை முழுமையாக அங்கீகரித்தார்கள் . அவருடைய நடிப்பில் 'மிகை' என்பது கூடுதல் அணிகலனாக மாறி அவருக்கு மேலும் புகழ் சேர்த்தது .
ஐம்பது ,அறுபதுகளில் மிகை நடிப்பில் கொடிகட்டியவர் ராதா ! எவ்வளவு பெரிய ஆள் அவர் பக்கத்தில் நின்றாலும் அமுங்கி போய் தான் தெரிவார் . ஓவர் ஆக்சன் செய்து சிவாஜியும் நாகேஷும் எழுபதுகளில் எரிச்சலுக்கு தான் ஆளானார்கள் .

...
இன்னொரு விஷயம் இதை இங்கு குறிப்பிட்டேஆகவேண்டும் .
இன்றைய நடிகர்களில் கமல் ஹாசன் நடிப்பு பற்றி ஒரு விஷயம் . அவர் நடிக்கும் போது ஒரு "கர்வம் " தெரிவதை கவனித்திருக்கிறீர்களா ? அவர் நடிக்கிற தோரணை " ஆமா , இந்த படத்தில் எனக்கு நிறைய வேலை !" என்று கேமரா முன் கர்வத்துடன் நிற்பார் கமல் .
இன்றைக்கு அகில இந்தியாவிலும் கதாநாயகர்களில் கேமரா முன் நடிக்கும்போது கர்வம் கொஞ்சம் கூட இல்லாமல் படு ஸ்மார்ட் ஆ நடிப்பவர் மோகன் லால் மட்டுமே !

6 comments:

  1. சார் ஆகிருதி அப்படின்னா என்ன ?

    ReplyDelete
  2. I should have mentioned it as 'Personality' or in other words " AALUMAI"

    ReplyDelete
  3. Hard hitting analysis. I heard recently that Kamal and Mohanlal may act in Tamil remake of A Wednesday.

    ReplyDelete
  4. I see!
    Who is doing Nasirudeen Shah's role and who is Anupam Kher?

    ReplyDelete
  5. Kamal Hassan - NS and Mohanlal - AK role.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.