A Pope is not ill until He is dead என்பது வாட்டிகன் விதிமுறை . மருத்துவ விதிமுறை Ailing Popes are not unusual. சுகவீனம் ஏற்பட்டு விடும்போது போப் கூட நோயாளி தான் .
முன்னாளில் ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பதுகளில் ஒருபோப் ' பயஸ் ' என்று பெயர் . 'சேசு சபை பாதிரிகள் சிகரட் பிடிக்கக்கூடாது' . என்றார். இது பரவாயில்லை. தப்புன்னு சொல்லமுடியுமா ? பாதிரிகள் என்று இல்லை யாருக்குமே சிகரட் குடிப்பது உடம்புக்கு தொந்தரவு தான் .சுகக்கேடு தான் .ஆனால் இந்த போப் ' விதவைகள் மறுமணம் செய்வது கூடாது ' என்று வேறு சொன்னார் . கடைசி காலத்தில் அவருக்கும் சுகவீனம் ஏற்பட்டது . 'மெண்டல் பிரச்சினை '.மனநிலை கடுமையாக பாதிக்கப்பட்ட நிலை . Ailing Popes are not unusual.
ஆல்பெர் காம்யு தன் 'வீழ்ச்சி' நாவலில் சொன்னார் '' போப் சிம்மாசனத்தில் உட்கார்ந்து ஜெபிப்பதை நிறுத்தி விட்டு மோசமான தீயவர்கள் மத்தியில் வந்து வாழவேண்டும்.''
சேரியில் வந்து வசிக்கும் போப் நமக்கு வேண்டும். வாட்டிகன் அரண்மனையை விட்டு போப் சேரிக்கு வந்து வாழ வேண்டும்.
'But who today is the enemy of the people of god ? Louis the emperor or John XXII the Pope ?'
-Umberto Eco in 'The name of the Rose'
...
போப் ஒருவர் விடுமுறை கொண்டாட்டத்திற்காக காட்டுப்பகுதி ஒன்றிற்கு சென்றவர் விருந்தை முடித்துக்கொண்டு விச்ராந்தியாக 'சின்ன வாக் ' போக ஆரம்பித்தவர் ஏதோ சிந்தனையில் மூழ்கியவாறு காட்டின் உள்பகுதிக்கு சென்று விட்டார் . திடீரென்று எதிரே ஒரு சிங்கம் . நடுங்கிபோய் முழந்தாளிட்டு ' தேவனே ! காப்பாற்று !' என கண்மூடி பிரார்த்திக்க ஆரம்பித்து விட்டார் . சிறிது நேரம் கழித்து கண்ணை திறந்து பார்த்தால் இவர் முன் சிங்கமும் கண் மூடி ,முழந்தாளிட்டு கை கூப்பி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தது . போப் பரவசமாகி வான் நோக்கி '' தேவனே ! உம்முடைய வல்லமை அளப்பரியது !! சிங்கத்தைக்கூட மனம் திரும்ப செய்து விட்டீரே !!! என்னே உம்முடைய பெருமை !!!" என கூவினார் . சிங்கம் கண் திறந்து " சாப்பிடும் முன் தேவனுக்கு நன்றி ஜெபம் சொல்கிறேன் . இன்றைய உணவுக்காக கடவுளுக்கு நன்றி.தேயா கிராசியஸ் !" என்று அதே பரவசத்துடன் சொல்லி " ஜெபம் செய்யும்போது கூப்பாடு போடக்கூடாது " என்று கண்டிப்புடன் போப்பை நோக்கி அதட்டி விட்டு சாப்பிட ஆரம்பித்தது.


welcome rpr!
we are eagerly waiting for your
pathivugal!