Share

Aug 25, 2009

O Mehbooba, O Mehbooba


ராஜ்கபூரின் இந்தி படம் 'சங்கம்' .இந்த படத்தில் அந்த காலத்திய மற்ற எல்லா இந்தி படங்கள் போல எல்லா பாடல்களும் ஹிட் தான். ஷங்கர் - ஜெய்கிஷன் இசை.
ஹிந்திப்பட ரசிகர்கள் ஒவ்வொருவரும் இதில் ஒவ்வொரு பாடலை பிடித்த பாடலாக சொல்வார்கள்.

எனக்கு பிடித்த பாடல்
“ O Mehbooba , O Mehbooba
Tere Dil Ke Paas Hi Hai Meri Manzil-e-mashood
Voh Kaunsi Mehfil Hai Jahan Tu Nahin Maujood “



இந்த ஒரு பாடலுக்கு " சங்கம் " படத்தில் வரும் பிற பாடல்கள் உறை போட காணாது.
https://www.youtube.com/watch?v=FHOugjKQ_KU

பாடல் முகேஷ் பாடியது. இந்த பாடலை காதால் மட்டும் கேட்பது போதாது. அவசியம் கண் கொண்டு அந்த பாடல் காட்சியோடு தான் பார்த்து ரசிக்க வேண்டும். ராஜ் கபூர் அட்டகாசம் ரொம்ப உச்சம். என்ன ஒரு
Lively Enthusiasm , spirit, activeness!

ராஜேந்திர குமாருடன் படகில் ஏறிவிடும் வைஜயந்தி மாலாவை கொஞ்சமும் மனசை விடாமல் மற்றொரு படகில் ஏறி துரத்தி, கவர்ந்து பாடும் ராஜ் கபூர். அந்த பனி மூட்டமும் அழகான ஏரியும் .. காண இரு கண் போதவே போதாது.

பெண்ணாக இருப்பதென்பது ஒரு "பிழை" யல்ல என்றாலும் கூட குறைந்த பட்சமாக அவள் ஒரு "அசாதாரண விசித்திரம். "
To be a woman, If not a defect, is at least a peculiarity.
மேற்கண்ட வார்த்தைகள் பெண்ணிய வாதியும் சார்த்தரின் இனிய தோழியுமான சிமோன் தி புவோ (Simone de Beauvoir) சொன்னதாகும்.

தான் கவர்ந்து செல்லப்படவேண்டிய விஷேச பரிசு என்றே தன்னை பற்றி பெண் நினைப்பவள். இதனை உணர்த்தக்கூடிய வைஜயந்தி மாலாவின் உணர்வும், பாவமும் இந்த பாடலை மிகவும் உன்னத நிலைக்கு கொண்டு சென்று விடுகிறது. நான் இந்த பாடல் காட்சியை மட்டும் நூற்றுக்கணக்கான தடவை பார்த்திருக்கிறேன். சலிக்கவில்லை .
பாடல் காட்சிகளில் ஷம்மி கபூரின் Arrogance பற்றி ஹிந்திப்பட ரசிகர்கள் அறிவர். உண்மையில் அவர் அண்ணன் ராஜ் கபூர் இந்த ஒரு பாடல் காட்சியில் மட்டும் தம்பி ஷம்மியை மிஞ்சி விடுகிறார்.
பாடலை பாடும் முகேஷ் கூட தன்னுடைய எல்லையை மீறித்தான் கிஷோர் குமார் பாடுவதை போல படு குஷியோடு
Tere Dil Ke Paas Hi Hai Meri Manzil-e-maqsoodஎன பாடியுள்ளார். முகேஷ் மிகவும் அமைதியாக பாடுபவராகத்தான் பெரும்பாலும் யார் மனதிலும் தோற்றம் தருவார். ராஜ் கபூர் என்றாலே முகேஷ் நினைவில் வந்து விடுவார். அந்த அளவுக்கு ஒரு அபூர்வ காம்பினேசன்.

“ Kis Baat Pe Naaraaz Ho, Kis Baat Ka Hai ham
Kis Soch Mein Doobi Ho Tum, Ho Jaayega Sangam
O Mehbooba, O Mehbooba “

எனக்கு இந்தி தெரியாது. இந்தி பாடல்களுக்கு பெரும்பாலும் அர்த்தம் கூட தெரியாது தான். அதனால் என்ன?!

சமீபத்தில் எனக்கு ஒரு அனுபவம். தமிழில் கூட ஒரு பாடல் வரி நான் நினைத்ததற்கு மாறாக வேறு வார்த்தைகள் இருந்ததை அறிந்தபோது ஆச்சரியப்பட்டேன்.

'ஹல்லோ மிஸ்டர் ஜமின்தார் ' படத்தில் பி பி எஸ் பாடிய " காதல் நிலவே கண்மணி ராதா நிம்மதியாக தூங்கு " என் Favourite. அதே படத்தில் மற்றொரு அருமையான பாடல் " இளமை கொலுவிருக்கும் ,இயற்கை மணமிருக்கும், இனிய சுவையிருக்கும் பருவத்திலே பெண் இல்லாமல் சுகம் இல்லை உலகத்திலே " என்ற பாடல். இதில் ஒரு சரணத்தில் வரும் வரிகளை " இன்று தேடி வரும், நாளை ஓடி விடும், செல்வம் சேர்ந்தபடி அமைந்திடுமா ? எந்த செல்வமும் பெண்மையின் சுகம் தருமா ?" என நான் சிறுவனாய் இருந்த காலத்தில் இருந்தே பாடி வந்துள்ளேன். ஆனால் சமீபத்தில் நண்பர் ஒருவர் சொன்னார்:
" செல்வம் சேர்ந்த படி அமைந்திடுமா " என்று கவிஞர் எழுதவில்லை
  " செல்வம் சிரித்தபடி அமுதிடுமா ?" என்று தான் எழுதினார் !"

செல்வம் சிரித்தபடி அமுதிடுமா?

4 comments:

  1. படித்தவுடன் அந்தப்பாடல் நினைவு அடுக்குகளிலிருந்து மேலே வந்தது, பிபிஎஸ்-ன் தேன் குரலுடன். மிகவும் ரஸமான அந்தப் பாடலின் நீங்கள் குறிப்பிட்ட கண்ணதாசனின் வரி சும்மா மயக்குகிறது. என்ன மாதிரியான கவிஞன் அவன். எங்கே போய் விட்டான் இப்போது..!

    :”Kis baat pe naaraaz ho.. Mehbooba.. ” –வுக்கு இப்படி மொழி பெயர்க்கலாமா?
    “எதற்காக இத்தனைக் கோபம்
    எதற்காக இப்படியொரு சோகம்
    எந்த நினைவினிலே மூழ்கிவிட்டாய் நீ
    என் இனிய காதலியே, காதலியே
    நிகழ்ந்துவிடும் ஒருநாள் நம்சங்கமம்”

    - விஜயசாரதி, ஹவானா

    ReplyDelete
  2. Thank you Vijay for your translation.

    ReplyDelete
  3. Dear RPR,

    “ O Mehbooba , O Mehbooba
    Tere Dil Ke Paas Hi Hai Meri Manzil-e-mashood
    Voh Kaunsi Mehfil Hai Jahan Tu Nahin Maujood “

    ஓ! காதலியே! காதலியே!
    உன் இதயத்தின் அருகேதான் நான் சென்றடைய வேண்டிய இடம்.
    நீ இடம் பெறாத குழு (கச்சேரிக்கான audience ) ஒன்று ஏதாவது உண்டா?!

    “Kis Baat Pe Naaraaz Ho, Kis Baat Ka Hai Gham
    Kis Soch Mein Doobi Ho Tum, Ho Jaayega Sangam
    O Mehbooba, O Mehbooba “

    எந்த விஷயத்தில் கோபம் (ஊடல், upset)?
    எதற்காக இந்த சோகம்?
    எந்த சிந்தனையில் மூழ்கி விட்டாய்?
    (நிச்சயம் நம் இருவரின்) சங்கமம் உண்டாகும்.
    ஓ காதலியே! காதலியே!

    நன்றி!

    சினிமா விரும்பி

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.