Share

Sep 9, 2009

காலம் காலமாக

ஜெயலலிதா கட்சியிலிருந்து வெளியேறும் ஒவ்வொருவரும் சசிகலா பற்றி குற்றச்சாட்டு வாசிக்கிறார்கள் . பதினைந்து வருடங்கள் முன்னரே வலம்புரி ஜான் எழுதினார்." ஜெயலலிதா எம்ஜியார் விசுவாசிகளை பழி வாங்கினார் . சசிகலாவோ ஜெயலலிதா விசுவாசிகளையே பழி வாங்கினார். "

மன்னார்குடி கும்பல் கையில் கட்சி சிக்கிவிட்டது என்ற வார்த்தை
Cliché . An obvious remark. இன்னும் பலவருடங்களுக்கு அதிமுக வைவிட்டு வெளியேறுபவர்கள் இதையே தான் பயன்படுத்துவார்கள் .

இருபது வருடங்களுக்கு முன் சதுரனன் மிஸ்ரா என்ற வலது கம்யுனிஸ்ட் ராஜீவ் காந்தி மீது வைத்த குற்றச்சாட்டு :
It is so hard to approach the Prime Minister,
in the front there are battalions,
at the rear there are Italians.

கடைசியில் முள்ளில் உதிர்ந்த ரோஜாவானார் . ஸ்ரீபெரும்புதூர் மண்ணில் முக்கால் அம்மணமாக, 'காலணி' நீங்கலாக சிதறிய சோகம் .

நா . காமராசன் இரங்கல் கவிதை :

"அவனுடைய உடலின் அடையாளம்

முகத்தில் தொலைக்கப் பட்டு

காலடியில் கண்டுபிடிக்கப்பட்டது ."

பாதுகாப்பு குறைபாடுகள் என்று பொதுமைப்படுத்த முடியவில்லை . அம்மா இந்திராகாந்தியின் துர்மரணம் நிரூபித்த அபத்த உண்மை - "Security is mortal's chiefest enemy."(ஷேக்ஸ்பியர் மாக்பெத்தில்!)

ராகுல் காந்தி தமிழக சுற்றுப் பயணம். " எல்லாம் என் கையில் .கட்சி என் கையில் , இந்தியா என் கையில் , எதிர்காலம் என் கையில் ." பட்டத்து இளவரசன் . “There are two tragedies in life. One is not getting what one wants;
the other is getting it.'' - Oscar Wilde

" நடிகர் விஜய் காங்கிரஸின் அடி மட்டத்தொண்டராய் இருக்கவேண்டியதேவையில்லை . தொண்டராய் இருந்து உழைத்து விட்டு போகட்டும் .'' தன் மகன் அரசியல் எதிர்காலம் பற்றிய கவலையில் ஈ.வி.கே. எஸ். இளங்கோவன் பொருமல் வெளிப்பட்டு இருக்கிறது . நாரதா ! உன்னுடைய வேலை ஆரம்பமாகிவிட்டதா !

ஊர்க்காட்டுப் பீக்கு நாணவந்தான் ( நாணலில் சுற்றித்திரியும் குருவி ) அடிச்சிக்கிட்ட மாதிரி தமிழக காங்கிரஸ் அரசியல் . காலம் காலமாக .

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.