பொறி சிந்தும் வெங்கனல்

எப்போதுமே கையில் ' கல்கண்டு ' வாரப்பத்திரிக்கை கர்ணனுக்கு கவசகுண்டலம் போல லூயிசுக்கு. " பொது அறிவு வளரும்டா டே ''

லூயிஸ் ரொம்ப உற்சாகமாய் இருந்த காலம் உண்டு. 'அடிமைப் பெண் ' எம்ஜியார் கயிறுகளால் கட்டப்பட்ட நிலையில் தன் உடம்பின் தசைகளை முறுக்கி தன் வலு காட்டி கயிறை அறுக்கும் முயற்சியில் இருக்கும் போது,தரை டிக்கெட்டில் இருந்து தியேட்டரே கேட்கும்படி ஒரு கூப்பாடு போடுவான்-

" எங்க அண்ணன் தொடை 'மஸ்கை ' பாருய்யா !" muscles என்பதைத்தான் மஸ்க் என்பான் லூயிஸ்.

ரயில் பயணம் செய்யும்போது கதவருகில் நின்றுகொண்டு வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டு தான் வருவான். அப்படி நிற்கும்போது ஒரு சலவைத் தொழிலாளி கழுதையை மேய்த்துக் கொண்டு போனவனை பார்த்து " ஏ உன்னைத்தாண்டா!" என கூப்பிட்டு, சாட்டையுடன் திரும்பிய தொழிலாளியிடம் தன் வேட்டியை தூக்கிக் காட்டினான்.

அந்த கழுதைகாரன் கோபத்துடன் வஞ்சான். ரயிலில் போகிறவனை என்ன செய்யமுடியும். கழுதையை சாட்டையால் ரெண்டு அடி கொடுத்து மீண்டும் நடந்தவனை மீண்டும் லூயிஸ் " ஏ உன்னைத்தாண்டா டே" என கூப்பிட்டு தன் வேட்டியைத்தூக்கி தன் குறியை இப்போது ஆட்டிக் காட்டினான்.

கழுதைகாரன் -"உன் ஆத்தாட்ட போயி காட்டுடா ... உன் அக்காக்கிட்ட ஆட்டிக்காட்டுடா வெண்ணை "

மீண்டும் லூயிஸ் வேட்டியை தூக்கிக்காட்டி " வேணுமா " என்றான். இப்போது புளுத்திக்காட்டினான்.

அந்த நேரம் பார்த்து ரயில் 'கிரிச் ...கிரிச்...க்ரீச்... ' ...ரயில் நின்றே விட்டது!!!

எதிர்பாரா இந்த திருப்பம் .....சூழலின் தீவிரம் லூயிஸின் மூளைக்கு எட்டியதில்.. அதிர்ச்சியில் லூயிஸ் புளுத்திக்காட்டிய கைக்கு மறு கையில் சுருண்ட நிலையில் இருந்த கல்கண்டு பத்திரிகை நழுவி கீழே விழுந்தே விட்டது!

விதி செய்யும் விளைவினுக்கே வேறு செய்வார் புவி மீதுளரோ?

கழுதைகாரன் சாட்டையோடு வெறியோடு ரயிலை நோக்கி ஓடி வந்தான். எப்படி? 'ஷோலே ' படத்தில் அமிதாப் பச்சன் செத்தவுடனே தர்மேந்திரா ' கப்பர்சிங் ' ன்னு வெறியோட அம்ஜத்கானை நோக்கி ஓடி வர்ற மாதிரியே தான் ஆவேசத்தோடு ஓடி வந்து ரயிலில் ஏறி கதவருகில் நின்ற லூயிஸை சாட்டையாலே வெளுக்க ஆரம்பித்து விட்டான். அடின்னா அடி உங்க வீட்டு எங்க வீட்டு அடியில்லை. சும்மா துவச்சு காயப்போட ஆரம்பிச்சிட்டான். "அண்ணே! மன்னிச்சிக்கங்க அண்ணே ...உங்க தம்பி மாதிரி நினைச்சுக்கங்க அண்ணே! வலிக்குதுன்னே! அடிக்காதிங்க அண்ணே! " லூயிஸ் கெஞ்சிக் கதறினான். " எந்த தம்பிடா அண்ணன் கிட்ட சுன்னிய புளுத்திக்காட்டுவான்?ஏண்டா " - கழுதைக் காரன் இப்படிக்கேட்டான். " தம்பி தான் அண்ணனுக்கு சுன்னிய புளுத்திக் காட்டுவானாடா ?" அடி வெளுத்துக்கொண்டே கேட்டான். இப்படி திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே,mummy mother sister ன்னு நிறையா Abusive language லே திட்டிக்கொண்டே சாட்டையாலே வெளுத்து விரியக்கட்டி விட்டான்.

இதனினும் வியாகுலம் யாதெனில் அவன் சாட்டையால் தாக்குகின்ற பாணியை அவ்வப்போது முற்றிலும் மாற்றி லூயிஸின் அடிவயிற்றிற்கு கீழ் , தொடைகளுக்கு நடுவே சாட்டைக் கம்பின் நுனியால் தேடி தேடி குத்தி " இப்ப காட்டுறா .. இப்ப காட்டுறா ஒன் சுன்னியை " என்று கூப்பாடு போட்டது தான்.


5 comments:

  1. :)))))

    சிரித்து வயிறு வலிக்கிறது :)))

  1. அட்டகாசமான பதிவு

    அன்புடன்


    சூர்யா.

  1. Kannan said...:

    I got it, kind of, Indian Railways is not reliable !!! Is that the moral of the story ?:)

  1. Paagarkai said...:

    சே ...உங்க இடுகைய படிச்சாலே வயிறு வலிதான்.

  1. Arun said...:

    He should have tried to escape by running into the toilet atleast.
    Maybe not covered in Kalkandu GK:-)
    Hilarious one!!!

    Arunkumar

Post a Comment

Followers