Share

Aug 3, 2014

Carnal Thoughts - 39


 

சித்தப்பா ஜகதலப்ரதாபன் வருகிறார். நகைக்கடை பஜாரில் உள்ள தன் அண்ணன் மகன்  கடைக்குள் நுழைகிறார். கல்லாவில் அமர்ந்திருக்கும் சண்முகம்" வாங்க சித்தப்பா!"
"சம்முவம் !"
"சொல்லுங்க சித்தப்பா!"
கடையில் சண்முகத்தை பார்க்கவந்திருக்கும் என்னையும்பார்க்கிறார்.
"தொர! (துரை) பேராண்டி!"
நான் " தாத்தா!"

"காட்டுல வேல ஜாஸ்திய்யா! இந்தப்பக்கம் வரமுடியல"
சண்முகம்"என் தம்பிய அப்பப்ப விவசாயத்தயும் பாக்கச்சொல்லுங்க!''
சண்முகத்தின் சித்தப்பா மகன் மெத்தப்படிச்ச இஞ்ஜினியர். உள்ளூரில் பில்டிங் காண்ட்ராக்டர்.
சின்னக்கடை வீதியில் உள்ள சித்தப்பாவின் காம்ப்ளக்ஸில் தான் இஞ்சினியர் தம்பியின் ஆஃபிஸ்.
"உன் தம்பியா! அவன் பண்ணைக்கு வராம இருந்தா போதும்யா"
"ஏன்?"
" ஐய்யோ! அவன் வந்தா உடனே அங்க வேலை பாக்கற பொட்டப்பிள்ளங்கள வேலைக்கு வேண்டாம் நீ போ.. நீ போன்னு சண்டை போட்டு நிறுத்திடுறாம்ப்பா... இப்ப காட்டு வேலக்கு பொட்டப்பிள்ளக கிடைக்கிறது எவ்வளவு சிரமம்? உனக்குத் தெரியும்ல.. நான் என்ன பாடு பட்டு வேலைக்கு பிள்ளகள கொண்டு வர்றேன்..  அங்கங்க கிராமம் கிராமமா அலஞ்சி காட்டு வேலக்கு  பொட்டப் பிள்ளகள கொண்டு வர்றேன். இவன் திடீர்னு ஒரு நாள் பண்ணைக்கு வர வேண்டியது.. வந்தவுடன அந்தப்பிள்ளக மேல எரிஞ்சி விழுரான்.. நீ வேலக்கு வேண்டாம் போன்னு ஒவ்வொருத்தியா சண்ட போட்டு அனுப்பி விட்றான்... உடனே கார்ல ஏறிப் போயிடறான்.நான் காட்டு வேலைக்கு பொம்பளையாள் கிடைக்காம என்ன பாடு படுறேன்னு ஒந்தம்பிக்கி தெரியமாட்டேங்குதேப்பா... சம்முவம்..நீ கொஞ்சம் தம்பிக்கு புத்தி சொல்லுப்பா.. டேய்.. சித்தப்பாவ ஒழுங்கா விவசாயத்த பாக்க விட்றான்னு சொல்லுப்பா.. உன் சித்தி தாம்ப்பா சும்மா இருக்காம தம்பிக்கிட்ட
 " போடா காட்டயும் போய் பார்றா... "ன்னு உசுப்பி விடுறா...  உன் சித்திக்கும் புத்தி சொல்லுப்பா..."

Deconstruction ! 
ஜகதலப்ரதாபன் கிளம்பிப்போனவுடன் சண்முகம் சொல்கிறார்: தொர! இப்ப என் சித்தப்பா என்ன சொல்லிட்டுப்போறாரு.. புரியுதா? "
Subtext!
ஜகதலப்ரதாபன் மாதிரியே குரலை மாற்றி சொல்ல ஆரம்பிக்கிறார் சண்முகம். " சம்முவம்! நான் காட்டுக்கு பண்ணைக்கு விவசாயம் பாக்க மட்டுமாப்பா போறேன். டொக்கு போடவும் தானேப்பா.. நான் இந்த வயசில டொக்கு போட என்ன பாடு படுறேன் தெரியுமா? ஏம்ப்பா... டொக்கு போட பொம்பளையாளு கிடைக்கிறது எவ்வளவு சிரமம்? நான் டொக்கு போட பொட்டைப்பிள்ளக கிடைக்காதான்னு கிராமம் கிராமமா  நாயா அலஞ்சி பண்ணைக்குகொண்டு வந்தா.. தம்பி இத கண்டு பிடிச்சி திடீர்னு பண்ணக்கு வந்து எங்க அப்பா டொக்கு போடத்தான உன்னை கொண்டு வந்துருக்காருன்னு சண்ட போட்டு ஒவ்வொருத்தியா
விரட்டி விட் ற்றாம்ப்பா...   உன் சித்தி தாம்ப்பா தம்பிய " காட்டுக்குப் போய் அங்க இருக்கறவளயெல்லாம் விரட்டி விடுறா.. ஒங்கப்பன் வீட்டுக்கே வர மாட்டங்கறான்.. உனக்கும் கல்யாணமாகி நீயும் பிள்ள பெத்துட்ட.. இன்னும் ஒங்கப்பன் அடங்க மாட்டேங்கிறான... நானும் நாப்பது வருசமா அவன் சேட்டய பொறுத்துக்கிட்டுத்தான் இருக்கேன்.. இன்னும் கிழவன் அடங்க மாட்டேங்கறானே!" ன்னு உசுப்பி உசுப்பி உடுறா!சம்முவம்! நீ தம்பிக்கிட்ட சொல்லுப்பா.. சித்திக்கிட்டயும் சொல்லுப்பா..  ஏழு வயசில எந்திரிச்சது எழுபது வயசுல மடங்காதுன்னு புத்தி சொல்லுப்பா.."





http://www.toonpool.com/user/250/files/old_skirt-chaser_67875.jpg

2 comments:

Note: Only a member of this blog may post a comment.