Share

Nov 4, 2014

ராஜேஷ் கன்னா



அந்த  Havell’s fans - 
"Fans for ever" விளம்பரம்  
நினைவிருக்கிறதா!
ராஜேஷ்  கன்னா ! விசிறிகள் ! Poetic  comparison! பின்னனியில் 'Ye shaam mastaanee' பாடல் ஹம்மிங் !
"My fans will always remain with me."
The only commercial Rajesh Khanna appeared!

ராஜேஷ் கன்னாவின் விசிறிகளுக்கு  அவர்   Demigod! அப்படி ஒரு  Craze !

எனக்கு அந்தக்கால 'ஆங்க்ரி யங் மேன்' அமிதாப்பை அவ்வளவாகப் பிடிக்காது. ராஜேஷ் கன்னாவை மிகவும் பிடிக்கும்.சிறந்த நடிகர்!  Individual choice!

     
 ராஜேஷ்கன்னாவுக்கான  கிஷோர் குமார் பாடல்கள் !


“Roop Tera Mastana  Pyar Mera diwana “

“Kora Kaagaz Tha  Yeh Mann Mera “

“zindegi ek safar “

“Yeh shaam Mastaanee “

“Ye Kyaa huaa,Kaise huaa ,Kab huaa Kyo huaa”

ஆராதனா,கட்டி பதங், சச்சா ஜூட்டா, துஷ்மன், ஆன் மிலா சாஜ்னா, அமர் பிரேம்.....
ராஜேஷின்   கதாநாயகிகள்.
ஷர்மிளா தாகூர், மும்தாஜ், ஆஷா பரேக்.

ரகசிய கல்யாணம் ஒன்று இந்தியாவை கலக்கியது - ராஜேஷ் கன்னா
தன் நீண்ட நாள் காதலி அஞ்சு மஹேந்துருவை கை விட்டு,
டிம்ப்ள் கபாடியாவை திடீரென்று திருமணம் செய்தது தான்.

'ராஜேஷ் கன்னாவுக்கு  தான் ஜவஹர்லால் நேருன்னு
நினைப்பு '-ஹேமா மாலினியின் ரொம்பப் பழைய கமென்ட் !
....

விஜயா வாகினியில் "பந்திஷ் " பட ஷூட்டிங்.
Bandish

ராஜேஷ் கன்னா- ஹேமா மாலினி நடித்துக்கொண்டிருந்தார்கள். இருவரையுமே அந்த ஷூட்டிங்கில் தான் நான் பார்த்தேன்.ராமா நாயுடு படம்.

ஹேமாமாலினியிடம் ஷாட்டில் வசனம் பேசியதை தவிர
 ப்ரேக்கில் ராஜேஷ் கன்னா ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை!

...................................................

ராஜேஷ் கன்னா அந்திம காலத்தில் டிம்பிள் இல்லாமல் தான் வாழ்ந்தார். அனிதா அத்வானி என்ற பெண்ணுடன் சேர்ந்திருந்தார்.
 

உடல் நலம் குன்றியிருந்தபோது அவர் சொந்தக்குரலில் பதிவு செய்த "good bye, so long, farewell, adieu" விஷயம் படிக்கக் கிடைத்தபோது நெஞ்சை நெகிழ்த்தியது: " கடந்த காலத்தையே நினைத்துக் கொண்டு, அந்த நினைவுகளில் வாழும் பழக்கம் எனக்குக் கிடையாது. எப்போதும் எதிர்காலத்தையே பார்க்கவேண்டும். கடந்து போன சம்பவங்களைப் பற்றி நினைத்துப் பார்ப்பதில் எந்தப் பயனுமே இல்லை. ஆனால் அந்நியமான சூழலில் நமக்கு நன்கு தெரிந்த முகங்களைப் பார்க்கின்ற போது நமக்கு அந்தக் கால நினைவுகள் வரத்தான் செய்கின்றன. என் கலையுலக வாழ்வு  நாடகத்தில் ஆரம்பித்தது. அங்கிருந்து தான் திரையுலகுக்கு வந்தேன். எனக்கு குரு என்று யாருமே இருந்ததில்லை. தயாரிப்பாளர்கள் நடத்திய
ஒரு திறமைப் போட்டி மூலம் தான் நான் திரைத்துறைக்கு வந்தேன்......"


கன்னா இறந்த பின் டிம்ப்ள் குடும்பத்தினர் தன் மீது வன்முறையைப் பிரயோகம் செய்ததாகவும்,அவரை வீட்டை விட்டே துரத்தி விட்டதாகவும்  அனிதா அத்வானி ஒரு வழக்கு தொடுத்தார்....

ராஜேஷ் கன்னாவின் அந்த மும்பை 'ஆசிர்வாத்' பங்களா விற்கப்பட்டு விட்ட செய்தி சமீபத்தில் பத்திரிக்கையில் பார்க்கக்கிடைத்தது.
90 கோடியாமே!

....................................................................

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.