Share

Jul 24, 2016

சிக்கலான இழைகள்

’அதே கண்கள்’ படத்தில் ”பொம்பள ஒருத்தி இருந்தாளாம், பூதத்தைப் பார்த்து பயந்தாளாம்” பாட்டில் வருகிற வார்த்தைகள்
“சொட்டிஜா சொட்டிஜா சொட்டிஜா, சொன்னவா சொன்னவா சொன்னவா சொன்னவா, தாக்கெரஸ் தாக்கெரஸ், ஜாவா டக்குனகோ டக்குனகோ” சௌராஷ்ட்ரா மொழி!
நான் காலேஜில் படிக்கும்போது என் நண்பன் A.K.ரவியிடம் அர்த்தம் கேட்டிருக்கிறேன். அவன் சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது.
(A.K.Ravi is standing behind R.P.Rajanayahem)

சொட்டிஜா – விட்டுப்போ
சொன்னவா – விடமாட்டேன்(டி)
தாக்கெரஸ் – பயமாருக்கு
ஜாவா டக்குனகோ – போடி, பயப்படாதே
சினிமாவில் பின்னணி பாடகர்கள் டி.எம்.சௌந்தர்ராஜன், ஏ.எல்.ராகவன், எஸ்.சி.கிருஷ்ணன் ஆகியோர் சௌராஷ்டிர இனத்தை சார்ந்தவர்கள். நடிகர்கள்
வில்லன் டி.கே.ராமச்சந்திரன், வெண்ணிற ஆடை நிர்மலா
சௌராஷ்டிரா தான்.

நடிகை தேவிகாவின் கணவர் (கரகாட்டக்காரன் கனகாவின் அப்பா!) எஸ்.எஸ்.தேவதாஸ் கூட சௌராஷ்ட்ரா தான். பீம்சிங்கிடம் உதவி இயக்குனராக இருந்தவர் தேவதாஸ். ’வெகுளிப்பெண்’, ’முன்னூறு நாள்’ படங்களின் இயக்குனர். 

ஆண்டவன் கட்டளை படத்தில் தேவிகா நீராடிக்கொண்டே பாடும் பாடல் ”அழகே வா அருகே வா”

” ஆலயக்கலசம் ஆதவனாலே மின்னுதல் போலே மின்னுது இங்கே” என்றவாறு தன் ’முலைகள்’ மீது சட்டென்று பெருமிதமாக பார்வையை ஓட்டுவார்.
என்னா பெருமை!
பாடப்பாட ராகம், மூட மூட ரோகம்!
………………………………………………
பன்றி மலத்தை தின்று முகம் சுளிக்க வைக்கிறது.
கரப்பான் பூச்சியோ டாய்லட்டில் முகம் சுளிக்க வைக்கிறது.
இங்கே பன்றி வால் பற்றி கவிஞர் கலாப்ரியாவும்
கரப்பான் பூச்சி கால் பற்றி க.நா.சுவும் எழுதியவை

‘இன்றைய தினத்தை
ஆரம்பித்து வைக்கிறது
பன்றியின் சுருட்டை வால்
அழகு’
- கலாப்ரியா


“கரப்பான் பூச்சியைப் போல, என் எண்ணக்கால்கள் இருந்த இடம் விட்டு நகராமல் சைக்கிள் விடுகின்றன……………..
கரப்பான் பூச்சி அருவருப்பு தரும் பூச்சி தான். ஆனால் அது மல்லாந்து கிடந்து காற்றிலே கால்களால் சைக்கிள் விடும்போது என்னால் அதைப் பார்க்காமல் இருக்க முடிவதேயில்லை. கவர்ச்சியும் தான் இருந்தது அதிலே!”
- க. நா.சு - ‘அசுர கணம்’ என்கிற பிரமாதமான நாவலில்
( நாவலா? குறு நாவலா?)
……………………………………….



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.