Share

Sep 30, 2016

துற...



என் பள்ளிப்படிப்பு திருச்சி செயிண்ட் ஜோசப்’ஸ்.
சேசு சபை பாதிரிகள் தான் பாளையங்கோட்டை செயிண்ட் சேவியர்ஸ், சென்னை லொயோலா ஆகிய கல்வி நிறுவனங்களை நடத்துபவர்கள்.
பாதிரியார்களின் டைனிங் ஹாலில் எட்டிப்பார்த்திருக்கிறேன். பழங்கள் வித,விதமாக டைனிங் டேபிளில் வைக்கப்பட்டிருக்கும்.
சிறுவனாக ஆர்வத்துடன் ஒரு பாதிரியாரிடம் அவர்களின் உணவுப் பழக்கம் பற்றி விசாரித்திருக்கிறேன்.
ஞாயிற்றுக்கிழமை மட்டன், திங்கள்கிழமை சிக்கன், செவ்வாய்க்கிழமை போர்க், புதன்கிழமை பீஃப், வியாழக்கிழமை மீண்டும் மட்டன், சனிக்கிழமை மீண்டும் சிக்கன்.
வெள்ளிக்கிழமை மெனு?

பாதிரியார் சற்றே சோகம் ததும்ப சொன்னார்.”வெள்ளிக்கிழமை ஆண்டவர் சேசு இறந்த நாள். ஆனதால் மாமிசம் சாப்பிடவே மாட்டோம். துக்கம் அனுஷ்டிப்போம். அன்று மீனும் முட்டையும் மட்டும் தான் சாப்பாட்டோடு சேர்த்துக்கொள்வோம்.”

Two great European narcotics, Alcohol and Christianity.
- Nietzshe

……………………………………………………………………

மத்தாயுட பிரார்த்தனா!

ஞான ரதம் பத்திரிகையில் வந்த கவிதைஒன்று .
" சைத்தான்" எழுதியது !

ஜி நாகராஜன் எழுதிய நாவல் "நாளை மற்றுமொரு நாளே " இந்தபத்திரிக்கையில் தான் தொடராக வந்தது . சுந்தர ராமசாமியின் பிரபலமான 'சில கெட்ட உறுப்புகள்" ( முலையை மட்டும் வெட்டிடுரெனே.. எந்த முலை?) ஞானரதம் பத்திரிகையில் தான் பிரசுரமானது .

மத்தாயுட பிரார்த்தனா!

எண்ட கர்த்தாவே !
மத்தாயு கள்ளும் குடிக்கும்
பெண்ணும் பிடிக்கும் .
கர்த்தர் ரட்சிக்கனும் .
ரட்சிச்சிலேங்கில் மத்தாயுக்கு மயிரானு ..

- "சைத்தான் "

ஞானரதம் ஜூலை ,1973

...................................................................



பிரார்த்தனை

அந்தோனி டிமெல்லோ ஒரு கிறித்துவ பாதிரி . நிறைய குட்டிகதைகள் எழுதியுள்ளார் . மதத்திற்கு விரோதமான கருத்துக்கள் அந்த கதைகளில் இருப்பதாக அவர் மீது கத்தோலிக்கம் கண்டனம் வைத்தது .அவர் எழுதிய குட்டி கதை ஒன்று .

' ஒரு பாதிரி ஜெபம் செய்ய ஆரம்பிக்கிறார் . அப்போது மழைக்காலம். அதன் காரணமாக அவருடைய சர்ச் ஒட்டியுள்ள வீட்டை சுற்றி தேங்கிய குட்டையில் தவளைகள் சப்தம் .

பாதிரியார் பிரார்த்தனைக்கு இந்த தவளை சத்தம் குந்தகம் விளைவிக்கின்றன என எண்ணி அயர்ச்சியாடைகிறார் .

“Quiet . I’m at prayer” என்று ஒரு கூப்பாடு போடுகிறார் .

தவளைகள் அனைத்தும் நிசப்தமாகி விடுகின்றன . பயங்கர அமைதி !

பாதிரி சந்தோசமாக உரக்க கூவி பிரார்த்திக்கிறார் .

“My Father! Who art in heaven!”

வானத்திலிருந்து ஒரு அசரிரி

“OK! I am hearing you.
But why did you stop the prayer of the Frogs?!”

..........................................

Ailing Popes are not unusual

82 வயது போப் பெனடிக்ட் இத்தாலியில் விடுமுறையை கொண்டாட சில நாட்களுக்கு முன் சென்றிருந்த போது கீழே விழுந்து கை மணிக்கட்டில் எலும்பில் அடி பட்டு கீறல் ஏற்பட்டு சுகவீனம் ஏற்பட்டதாக ஒரு செய்தி .

A Pope is not ill until He is dead என்பது வாட்டிகன் விதிமுறை . மருத்துவ விதிமுறை Ailing Popes are not unusual. சுகவீனம் ஏற்பட்டு விடும்போது போப் கூட நோயாளி தான் .
முன்னாளில் ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பதுகளில் ஒருபோப் ' பயஸ் ' என்று பெயர் . 'சேசு சபை பாதிரிகள் சிகரட் பிடிக்கக்கூடாது' . என்றார். இது பரவாயில்லை. தப்புன்னு சொல்லமுடியுமா ? பாதிரிகள் என்று இல்லை யாருக்குமே சிகரட் குடிப்பது உடம்புக்கு தொந்தரவு தான் .சுகக்கேடு தான் .ஆனால் இந்த போப் ' விதவைகள் மறுமணம் செய்வது கூடாது ' என்று வேறு சொன்னார் . கடைசி காலத்தில் அவருக்கும் சுகவீனம் ஏற்பட்டது . 'மெண்டல் பிரச்சினை '.மனநிலை கடுமையாக பாதிக்கப்பட்ட நிலை . Ailing Popes are not unusual.
ஆல்பெர் காம்யு தன் 'வீழ்ச்சி' நாவலில் சொன்னார் '' போப் சிம்மாசனத்தில் உட்கார்ந்து ஜெபிப்பதை நிறுத்தி விட்டு மோசமான தீயவர்கள் மத்தியில் வந்து வாழவேண்டும்.''
சேரியில் வந்து வசிக்கும் போப் நமக்கு வேண்டும். வாட்டிகன் அரண்மனையை விட்டு போப் சேரிக்கு வந்து வாழ வேண்டும்.

'But who today is the enemy of the people of god ? Louis the emperor or John XXII the Pope ?'
-Umberto Eco in 'The name of the Rose'

...............................

பாதிரி ஒருவர் விடுமுறை கொண்டாட்டத்திற்காக காட்டுப்பகுதி ஒன்றிற்கு சென்றவர் விருந்தை முடித்துக்கொண்டு விச்ராந்தியாக 'சின்ன வாக் ' போக ஆரம்பித்தவர் ஏதோ சிந்தனையில் மூழ்கியவாறு காட்டின் உள்பகுதிக்கு சென்று விட்டார் . திடீரென்று எதிரே ஒரு சிங்கம் . நடுங்கிபோய் முழந்தாளிட்டு ' தேவனே ! காப்பாற்று !' என கண்மூடி பிரார்த்திக்க ஆரம்பித்து விட்டார் . 
சிறிது நேரம் கழித்து கண்ணை திறந்து பார்த்தால் இவர் முன் சிங்கமும் கண் மூடி ,முழந்தாளிட்டு கை கூப்பி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தது . பாதிரியார் பரவசமாகி வான் நோக்கி '' தேவனே ! உம்முடைய வல்லமை அளப்பரியது !! சிங்கத்தைக்கூட மனம் திரும்ப செய்து விட்டீரே !!! என்னே உம்முடைய பெருமை !!!" என கூவினார் . சிங்கம் கண் திறந்து " சாப்பிடும் முன் தேவனுக்கு நன்றி ஜெபம் சொல்கிறேன் . இன்றைய உணவுக்காக கடவுளுக்கு நன்றி.தேயா கிராசியஸ் !" என்று அதே பரவசத்துடன் சொல்லி " ஜெபம் செய்யும்போது கூப்பாடு போடக்கூடாது " என்று கண்டிப்புடன் பாதிரியாரை அதட்டி விட்டு சாப்பிட ஆரம்பித்தது.

.....................................

Photo
R.P.Rajanayahem

http://rprajanayahem.blogspot.in/2008/10/trichi-st.html


http://rprajanayahem.blogspot.in/2012/08/blog-post_9.html

http://rprajanayahem.blogspot.in/2012/04/blog-post_21.html

5 comments:

  1. Ur blogs are fantastic. How hard to collect infms. I am from pondy.hats off to u sir

    ReplyDelete
  2. மத்தாயுட பிரார்த்தனை எழுதியது குஞ்சுண்ணி ன்னு படித்த ஞாபகம் இருக்கு.
    செல்வக்குமார்

    ReplyDelete
  3. No..no.. that was Saiththaan only.

    ReplyDelete
  4. மத்தாயு - எனக்கு அர்த்தம் பரியலை சார்.

    ReplyDelete
    Replies
    1. Noun! It's a name of a person. christian name. Christians get their names from their saints. St.Mathew wrote one of the four new testament.

      Delete

Note: Only a member of this blog may post a comment.