Share

Mar 26, 2017

தி.ஜா மரணமும் அசோகமித்திரன் தகவல் பிழையும்


வரலாறு நிகழ்வுகளை சரியாக பதிகிறதா ?
சமீபத்திய மரணங்கள் பற்றியே கூட உண்மையை அறிவதில் குழப்பங்கள் நேர்கிறது .எனும்போது பல நூற்றாண்டு சம்பவங்களின் நம்பகத்தன்மை என்ன ?
தளையசிங்கம் மரணம் பற்றி ஜெயமோகன் பெரிய பொய்யை சொல்லி அதனை கேள்விக்கு நான் உள்ளாக்கி,
சுந்தர ராமசாமி களமிறங்கி,
மு.பொன்னம்பலம் சு.ரா எழுதிய தளையசிங்கத்தின் பிரபஞ்ச யதார்த்தம் கட்டுரையில் தளைய சிங்கம் மரணம் பற்றி தகவல் பிழை எதுவும் இல்லை என்று ஜெமோவின் முகத்திரை கிழித்தார்.
அப்புறமும் கூட நாஞ்சநாட்டான் ஒர்த்தன் 'அய்யோயோ நான் உண்மையின் பக்கம் நின்னு வெள்ளவேட்டியிலே புல்லழுக்கு, புடுக்குலே சொறி சொரங்காயிடுச்சி' ன்னு புலம்புனான்.
சாரு நிவேதிதா வின் Mummy returns – part 3 யில் ஜெயமோகன் எனக்கு தளையசிங்கம் மரணம் பற்றி எழுதிய கடிதத்தை வெளியிட்டு முழுசா அம்மண குண்டியா நிக்கும்படி பண்ணியாச்சு.

ப்ருனோ லத்தூர் அறிவியல் உண்மைகளை விஞ்ஞான விஷயங்களையே கேள்விக்குள்ளாக்கி விட்டார். இதை விட பெரிய சாதனை என்ன இருக்கிறது!
1973 ல் நடந்த தளையசிங்கம் மரணம் பற்றி இவ்வளவு போராட வேண்டி வந்துச்சு.

1982 ல் நடந்த தி .ஜானகிராமனின் மரணம் பற்றி ஒரு விஷயத்தை நான் பேசி விடுகிறேன்.
'ஜானகிராமனை மருத்துவமனையில் ஒரு நர்ஸ் அவமானப்படுத்தி விட்டார் . சில மணி நேரத்தில் அவர் மரணம் நிகழ்ந்தது. இது ஜானகிராமனுக்கு மட்டுமல்ல சாதாரணமாக யாருக்குமே நடந்திருக்க கூடாது ' என்கிற அர்த்தத்தில் அப்போது கணையாழியில் அசோகமித்திரன் எழுதியிருந்தார்.
வாசகர்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய செய்தி! ஜீரணிக்க மிகவும் கஷ்டமாய் இருந்தது . ஜானகிராமனுக்கு மரணமடையும்போது இப்படி ஒரு அவமானமா ?
இந்த ஜானகிராமன் பற்றிய செய்தி அசோகமித்திரனின் கட்டுரைகளில் உள்ளது.

1988 ல் சிட்டியிடம் நான் இந்த விஷயம் பற்றி பிரஸ்தாபித்த போது ' இப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை ' என உறுதியாக மறுத்தார். வேதனை பட்டார் . அப்படி எந்த அவமானமும் ஜானகிரமானுக்கு நடக்கவில்லை.
எனக்கு ஆச்சரியாமாக இருந்தது .

1989 ல் மார்ச் மாதம் நான் சென்னை சென்றிருந்த போது
ஜானகிராமனை கடைசி நேரத்தில் ஆஸ்பத்திரியில் கவனித்து கொண்டிருந்த மணிக்கொடி சிட்டியின் மகன்களில் ஒருவரான சங்கரை சந்திக்க விரும்பினேன்.
இவர் தான் ஜானகிராமன் இறந்த நேரத்தில் அவர் அருகில் இருந்தவர். தூர்தர்சனில் பணிபுரிந்து கொண்டிருந்தவர் .
சிட்டியின் மூத்த மகன் விஸ்வேஸ்வரம் தான் என்னை சங்கர் வீட்டுக்கு அழைத்து சென்றார்.
சங்கரிடம் கேட்டேன். ஜானகிராமனுக்கு இறப்பதற்கு முன் அவமானம் ஏதும் யாராலும் நடக்கவில்லை என்பதை சங்கர் உறுதிபட சொன்னார்.

இதில் அசோகமித்திரனுக்கு யாரோ தவறான தகவல் கொடுத்து அவர் கொஞ்சம் அவசரப்பட்டு கணையாழியில் அப்படி எழுதியிருக்கிறார் என்றே அனுமானிக்க வேண்டியிருக்கிறது .

அசோகமித்திரனிடம் அவரை புதுவையில் சந்தித்த போதும்
பின் என் முயற்சி காரணமாக அவர் ஸ்ரீவில்லி புத்தூர் வந்து பென்னிங்க்டன் நூலகம் நடத்திய விழாவில் (எழுத்தாளர் அறிமுகம் ) அசோகமித்திரனை அறிமுகப்படுத்தி நான் பேசிய பின் மறு நாள் அவரை வழியனுப்பும் போது ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையத்திலும் அவரிடம் சொல்லிவிட்டேன்.

2008ல் என் ப்ளாக்கில் இதை எழுதியிருக்கிறேன்.
........................................................

http://rprajanayahem.blogspot.in/2008/06/blog-post_14.html

http://rprajanayahem.blogspot.in/2009/08/blog-post.html

http://rprajanayahem.blogspot.in/2009/08/3.html

http://rprajanayahem.blogspot.in/…/…/carnal-thoughts-34.html

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.