Share

May 13, 2017

தமிழக அரசு இலச்சினை


சில விஷயம் பரவலாக ஆழமாக பதிந்து போய் விடும். அது உண்மையல்ல என்பதாகவோ மாற்றுக்கருத்தோ வரும்போது அதை ஏற்றுக்கொள்வது மிகவும் சிரமமாய் இருக்கும்.

ராஜபாளையம் ராம்கோ சிமெண்ட் நிறுவனத்தில் பணிபுரியும் பலரையும் சந்திக்க வாய்ப்பு கிடைத்த போது அவர்கள் கூறிய விஷயமொன்று - தங்கள் கம்பெனி லோகோ ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம்.
இதைச் சொல்லும்போதே அவர்கள் தமிழக அரசு லோகோவும் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் தான் என்ற பரவலாக அறியப்பட்ட விஷயத்தையும் சொல்கிறார்கள்.

ராம்கோ லோகோ ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் என்பது இங்கே முக்கியமில்லை. அது அந்த நிறுவண விஷயம்.

ஸ்ரீவில்லிபுத்தூர்காரர்கள் எப்போதும் இது குறித்து பெருமைப்படுவார்கள். ’எங்க கோபுரம் தான் தமிழக அரசு முத்திரையில் இருக்கு!’

தமிழ் நாட்டில் எந்த ஊர்க்காரராக இருந்தாலும் பொது அறிவு விஷயமாக ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் பற்றி இதை தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

ஐந்து வருடங்களுக்கு முன் குமுதத்தில் ”ராசாவின் மனசிலே” தலைப்பில் இளையராஜா ஒரு கேள்விக்கு பதில் சொல்லியிருந்தார்.

எல்லோரும் நம்பிக்கொண்டிருக்கும் இந்த விஷயத்தை ஆணித்தரமாக மறுத்திருந்தார்.
“ தமிழக அரசு இலச்சினையில் தமிழக முத்திரையில் இருப்பது ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரமே அல்ல. மதுரை மேற்கு கோபுரத்தின் தோற்றம் தான் அது.”


இது குறித்து ஆதாரபூர்வமான உண்மை என்ன? இளையராஜா சொல்வது சரி தானா? இளையராஜா சொல்வதற்கு யாரேனும் பெரிதாய் எதிர்வினையாற்றினார்களா?

We must be more concerned with truths than opinions. Stick to truths.
It is important that such information should be double-checked for authenticity and credibility.
………………………..

http://epaperbeta.timesofindia.com/Article.aspx…


http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post_9130.html

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.