Share

Feb 11, 2009

போடுங்கம்மா ஓட்டு


திமுக கவுன்சலர் தேர்தலில் அதற்கான வயது வரும் முன் சின்னப்பையனாய் இருக்கும்போதே வேட்பாளாராக என் மாமனார் எஸ்எம்டி சந்திரன் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி தேர்தலில் அப்போது நின்றார்.நாற்பத்தைந்து வருடம் முன்.



பெண்கள் பொது கக்கூஸ் சுவரில் ' உங்கள் வோட்டு எஸ் எம் டி சந்திரனுக்கே ' என்று இவருடைய நண்பர்கள் எழுதியிருக்கிறார்கள். அப்போது என் மாமனார் சந்திரனின் நண்பர் ஒருவர் ' இருங்கடா ' என்று கக்கூஸ் உள்ளே நுழைந்து விட்டார்.
' டே எவளாவது உள்ளே இருக்கப்போராடா ' என்று ஒரு ஆள் பதறியிருக்கிறார்.' டே நாத்தம் , அசிங்கம் சகிக்க முடியாதேடா ' என்று இன்னொரு ஆள் கூப்பாடு.' அய்யோயோ வெளியே வாடா டே '

உள்ளே அந்த நண்பர் மூக்கை பிடித்துக்கொண்டு உள்சுவரில் ' உங்கள் வோட்டு எஸ் எம் டி சந்திரனுக்கே ' என்று பொறுமையாக எழுதிஉதய சூரியன் படத்தையும் வரைந்து விட்டு பதினைந்து நிமிடம் கழித்து வெளியே வந்து சொன்னாராம்." டே வெளி சுவத்திலே எழுதிபோட்டு புரயோஜனம் ஏதும் இல்லேடா. அவசரமா அடக்க முடியாம வெளிக்கி இருக்க வர்றவ இதை பார்க்கவே மாட்டா . உள்ள போய் வெளிக்கு முக்கி பீ பேண்ட பிறகு உள் சுவரில் நான் எழுதிபோட்டதை அப்புறம் மெதுவா முழுசா வாசிப்பா .சுகமா வாசிப்பா .அவ மனசிலே அப்போ தான் நல்லா பதியும். சந்திரனுக்கு வோட்டு போடுவாடா"




என் மாமனார் ஜெயித்தார்.


பெண்கள் கக்கூசிற்குள் எழுதிபோட்டு விட்டு இப்படி படு ப்ராக்டிகலா பேசியவர் யார் தெரியுமா? 
 அதன் பிறகு ஏழு வருடம் கழிந்து இவர் தான் கர்ம வீரர் காமராஜரை விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் தோற்கடித்தவர்.

ஆம். சமீபத்தில் மறைந்த பெ. சீனிவாசன்.





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.