Share

Feb 17, 2009

இரண்டு கிழவிகள் எழுதிய நூல்கள்

வானதி பதிப்பகம் 1996 ல் வெளியிட்ட நூல் எம் எஸ் சௌந்தரம் எழுதிய "சங்கீத நினைவு அலைகள் " . இவர் அப்போது எண்பது வயது அம்மாள் . பத்மா சுப்பிரமணியம் அவர்களின் மன்னி யின் தாயார் . இந்த நூல் ரொம்ப சின்னது . மேலோட்டமாக கர்நாடக சங்கீத நூல் என்ற எண்ணத்தை படிப்பவருக்கு ஏற்படுத்தும் .ஆனால் சென்ற நூற்றாண்டின் பிராமண பெண் வாழ்க்கை போராட்டங்களை பற்றிய நூல் . சௌந்தரம் அவர்களின் கணவன் மட்டுமல்ல, அவரது குரு கூட அவர் வாழ்க்கையை எப்படியெல்லாம் சித்திரவதை செய்தார்கள் என்பதை சுருக்கமாக விளக்கிய அற்புதமான நூல் . அவரது குருநாதர் அரியக்குடி !அதோடு அந்தக்கால கர்நாடக சங்கீத உலகம், அன்றைய ஜாம்பவான்கள் , சிஷ்யர்கள் பற்றியும் அருமையான Reference book. ஆனால் ரொம்ப சின்ன புத்தகம் .பக்கங்கள் ரொம்ப குறைவு .

அழகிய நாயகி அம்மாள் அப்போது எண்பது வயது . எழுத்தாளர் பொன்னீலனின் தாயார் . இவர் எழுதிய " கவலை " பெரிய புத்தகம் . பக்கங்கள் ரொம்ப அதிகம் . 1998 ல் பாளையங்கோட்டை வளனார் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் துறை இந்த நூலை வெளியிட்டது . சென்ற நூற்றாண்டின் நாகர்கோவில் பகுதி நாடார் பெண்கள் வாழ்க்கை பற்றி அருமையான சித்திரம் . நெஞ்சு வெடித்து விடுமோ என்று பயப்படுகிற அளவுக்கு பெண்கள் துயரங்கள் பதியப்பட்டது .

இரண்டு முதிய பெண்மணிகள் இருவரும் இன்று இறந்து விட்டார்கள் .
'சங்கீத நினைவு அலைகள் ' 'கவலை ' இரண்டு நூல்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை . மடுவுக்கும் மலைக்கும் உள்ள வித்தியாசம் என்று உரக்க பேசக்கூட , பக்கம் பக்கமாக விளக்க கூட இங்கே ஆட்கள் உண்டு .

இது பாப்பாத்தி எழுதிய சாதாரண சின்ன புத்தகம் . அது எங்க சூத்திர பெண் எழுதிய கனமான பெரிய புத்தகம் என்று வர்க்க அடையாளம் கொடுக்கும் இலக்கிய அரசியல்வாதிகள் இங்கு அதிகம் .

2000 ல் திருச்சி தமிழ் இலக்கிய கழகத்தில் நான் அழகிய நாயகி அம்மாளின் 'கவலை ' நூல் பற்றி பேசினேன் . அப்போது எம் எஸ் சௌந்தரம் ' சங்கீத நினைவு அலைகள் ' நூலை ஒப்பிட்டு பேசினேன்.

1 comment:

  1. இரண்டாவது புத்த்கம் பற்றி அப்போது பல பத்திரிக்கைகளில் செய்தி வந்திருந்தது. முதல் புத்தக அறிமுகத்திற்க்கு நன்றி

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.