Share

Dec 28, 2014

A double drop



Willful ignorance 

ஆனந்த விகடனில் ஜெயகாந்தன் கொடுத்துள்ள பேட்டியில் மறைந்த ஆசிரியர் பற்றி அஞ்சலியாக ரொம்ப உயர்வாக சொல்லியிருக்கிறார். சரிதான்.

http://nadappu.com/wp-content/uploads/2014/07/jayakand_1.jpg

  


ஆனால் 1970களில் ஆனந்தவிகடனைப் பற்றி குறிப்பிட்டு சொல்லும்போது
 " அன்று எஸ்.எஸ்.வாசனின் ஆனந்த விகடனில் ஜெயகாந்தனுக்கு இருந்த மரியாதை கம்பனுக்கு மன்னன் குலோத்துங்கன் செய்த மரியாதைக்கு சமம்." என்று வாசனைப்பற்றி மிக உயர்வாக  குறிப்பிட்டு பின் எஸ்.பாலசுப்ரமணியன்  நிர்வகித்த ஆனந்த விகடன் மீது தன் கடுமையான அதிருப்தியை அடிக்கடி அரசியல் மேடையில் கூட வெளிப்படுத்தியிருக்கிறாரே!'

 Tactical stupidity!What areas of the skull must be traumatized to cause selective amnesia?!


"Facts do not cease to exist because they are ignored."
—Aldous Huxley


................................

இரண்டு காட்சிகள்
      

"சொல்லத்தான் நினைக்கிறேன்" படத்தில் ஸ்ரீவித்யா எழுதும் காதல் கடிதங்களை படிக்காமலே சிவ்குமார் போஸ்ட் செய்வார்.
தன்னை காதலிக்கவில்லை என்பது தெரியவரும்போது சிவகுமாரிடம் மெதுவாக கேட்பார். "நான் உங்க கிட்ட போஸ்ட் செய்யச்சொன்ன கடிதங்களை ஒரு தடவை கூட படிக்கனும்னு உங்களுக்கு தோணவே இல்லையா சார்"
'அதெப்படிங்க.. நீங்க இன்னொருவருக்கு எழுதிய கடிதத்தை நான் படிக்க முடியும்!' - சிவகுமார் பதில்.
இந்த பதிலால் இழப்பின் பரிமாணம் அதிகமாகி விட்ட சோகத்தையும் தாங்கிக்கொண்டு ஸ்ரீவித்யா சொல்வது :" நீங்க ஒரு ஜெண்டில் மேன் சார்.."
சொல்லத்தான் நினைக்கிறேன்
உள்ளத்தால் துடிக்கிறேன்
வாய் இருந்தும் சொல்வதற்கு
வார்த்தையின்றி தவிக்கிறேன்.
கே.பாலச்சந்தர் படக்காட்சிகளில் மேன்மையான ஒன்று இது.
படு நாடகத்தனமான காட்சி ஒன்று
"புதுப்புது அர்த்தங்கள்" படத்தில்
சித்தாரா தன் கணவன் சத்யனுடன் ( நடிகர் ராஜேஷின் தம்பி) மீண்டும் இணையும்போது முடவனான கணவன் தன் கால்களான இரு கட்டைகளையும் உடனே,உடனே தூக்கி வீசிவிடுவது! ஏன் தூக்கி வீசவேண்டும்!?
.....................

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.