Share

May 18, 2018

Filial Obligation


சி.ஆர். ராஜம்மா தமிழ் பெண் எழுத்தாளர். சொல்லொனாத் துயரம் அனுபவித்தவர்.
ரொம்ப காலம் முன்னாலேயே மறைந்து விட்டார்.
ஒரு கண் பார்வை இல்லாமல் இருந்தவர். பூ விழுந்த கண். அந்த கண் கொஞ்சம் வெளியே துருத்திக்கொண்டிருந்திருக்கிறது.

அவர் அனுபவித்த பெருந்துயரங்களில் ஒரு சிறு துளி இங்கே:
சி.ஆர்.ராஜம்மா ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த போது பக்கத்தில் படுத்து இருந்த அவருடைய கைக்குழந்தை உறக்கம் தொலைத்து விளையாண்டு கொண்டிருந்திருக்கிறது. அம்மாவின் கண் அந்த தூக்கத்திலும் வெளியே துருத்திக்கொண்டு தெரிவதை உற்று கவனித்த குழந்தை அந்த கண்ணை பிடித்து இழுத்து விட்டது.. பூ விழுந்த கண் வெளியே வந்து விட்டது.

அதிர்ந்து விழித்த சி.ஆர்.ராஜம்மா எப்படி துடித்து தவித்திருப்பார்.

’எனக்கொரு குழந்தை’ என்று இவர் நூலொன்றின் தலைப்பு.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.